திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது


தினத்தந்தி 14 Feb 2023 6:45 PM (Updated: 14 Feb 2023 6:46 PM)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களில் காலையில் உள் வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நவமி திதி தினமான நேற்று காலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட இடத்தில் சுமார் 25 அடி தூரத்துக்கு கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தென்பட்டன. பின்னர் மாலையில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஆனால், நேற்று காலை முதல் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடினர். சிலர் பாறையின் இடுக்கில் கிடந்த சங்கு, சிப்பி போன்ற பொருட்களை எடுத்துச்சென்றதை காணமுடிந்தது.


Next Story