திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்நர்சிங் கல்லூரியில் உலக முதலுதவி தினம்


திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார்நர்சிங் கல்லூரியில் உலக முதலுதவி தினம்
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் உலக முதலுதவி தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக உலக முதலுதவி தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் என்.கலைக்குருச்செல்வி தலைமை தாங்கினார். இணைபேராசிரியை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹேமா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக செஞ்சிலுவை சங்கம் நெல்லை கிளை முதலுதவி பேராசிரியர் சொக்கலிங்கம் கலந்து கொண்டு, முதலுதவி பற்றி கல்லூரி மாணவிகளுக்கு திரவ படிக காட்சி மூலமும் மற்றும் செய்முறை விளக்கமும் அளித்தார். பின்னர் பங்கேற்ற மாணவிகளுக்கு முதலுதவி சான்றிதழ் வழங்கப்பட்டது. தனலெட்சுமி நன்றி கூறினார்.


Next Story