சாராயம் கடத்த முயன்றவர்கள் தப்பி ஓட்டம்


சாராயம் கடத்த முயன்றவர்கள் தப்பி ஓட்டம்
x

நாகூர் அருகே சாராயம் கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடினர். அவர்கள் கடத்தி வந்த சாராய மூட்டை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் அகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அருகே சாராயம் கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடினர். அவர்கள் கடத்தி வந்த சாராய மூட்டை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் அகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாகை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி , துணை போலீஸ் சூப்பிண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் நாகை மாவட்டத்தில் சாராயக் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை நாகூர் போலீசார் நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

110 லிட்டா் சாராயம்

அப்போது காரைக்காலில் இருந்து கங்காளஞ்சேரி சாலையில் வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர். அப்போது காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரின் அருகில் சென்று பார்த்த போது காரின் உள்ளே சாராய மூட்டை இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், கடத்தி வரப்பட்ட 110 லிட்டர் சாராயம் மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த தப்பி ஓடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story