கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் திருட்டு


கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் திருட்டு
x

நெல்லை அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சிவந்திபட்டி அண்ணா தெருவை சேர்ந்தவர் யோசுவா சாம் ஜெபதுரை (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று மர்மநபர் அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து யோசுவா சாம் ஜெபதுரை சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.


Next Story