மூதாட்டியின் காதுகளை அறுத்து 5 பவுன் நகை கொள்ளை


மூதாட்டியின் காதுகளை அறுத்து 5 பவுன் நகை கொள்ளை
x

மூதாட்டியின் காதுகளை அறுத்து 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே கோசுராமன் கிராமத்தைச் சேர்ந்த பூச்சி என்பவரின் மனைவி முனியம்மாள் (வயது80). இவர்களது2 மகன்கள், 3 மகள்கள் திருமணமாகி மதுரையில் வசித்து வருகின்றனர். கிராமத்து வீட்டில் மூதாட்டி முனியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார். மூதாட்டியை வீட்டில் சென்று பார்த்த போது, மூதாட்டி முனியம்மாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார்.

அவரது 2 காதுகளை அறுத்து 5 பவுன் சவடி என்னும் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. மூதாட்டிக்கு காது, கண்ணம், கழுத்து போன்ற இடங்களில் வெட்டு காயம் இருந்துள்ளது. உடனே அவர் மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story