சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை


சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த  தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
x

டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது.

சென்னை,

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது.

மல்டிபிளக்ஸ், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள திரையரங்குகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகள் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 ஆகவும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ. 200 ஆகவும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 120 ஆகவும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Next Story