நடப்பாண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு


நடப்பாண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு
x

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொள்முதல்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:- ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய வட்டார பகுதிகளில் உள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதை மத்திய அரசின் விலை ஆதார் திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை தேங்காய் மத்திய அரசின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி மாவட்டத்தில் விருதுநகர் விற்பனை குழுவின்கிழ் இயங்கும் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 300 டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

விதிமுறைகள்

தரம் பரிசோதனையில் அயல் பொருட்கள் 1 சதவீதத்திற்கு மிகாமலும், பூஞ்சாணம் தாக்கிய மற்றும் கருப்பு நிற கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரைகள் சில்லு ஆகியவை தலா 10 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமலும் உள்ள நியாயமான சராசரி தரங்களுடன் ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரவை கொப்பரை கொண்டு வந்து கிலோவிற்கு ரூ. 108..60 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்பனை செய்து பயன்பெறலாம்.

மேலும் விவசாயிகளின் வங்கி கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். மாவட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் செப்டம்பர் 2023 வரை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகநகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவு செய்யலாம்

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார விவசாயிகள் ராஜபாளையம் விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். வத்திராயிருப்பில் கான்சாபுரத்தில் கட்டப்பட்டுள்ள விற்பனை கூடத்தில் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story