கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:46 PM GMT)

குடியிருப்புகளை இடிப்பதாக மிரட்டுபவர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விழுப்புரம்


குடியிருப்புகளை இடிப்பதாக மிரட்டுபவர் மீது நடவடிக்கை கோரி

கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


விழுப்புரம்

விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம், வாசுநகர், ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அங்கு தரையில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர். அப்போது தங்கள் குடியிருப்புகளை இடித்து தரைமட்டமாக்கி விடுவதாக மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் கோாிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் கோாிக்கை மனு கொடுத்தனர்.


Next Story