மனைவியை மிரட்டியவர் கைது


மனைவியை மிரட்டியவர் கைது
x

மானூர் அருகே மனைவியை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள மேல தென்கலத்தைச் சேர்ந்தவர் தேவநேசம் தங்கத்தாய் (வயது 39). இவரது கணவர் சுரேஷ் (40). இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 26-ந் தேதி சுரேஷ், தன் மனைவியிடம் தகராறு செய்து தாக்கியதோடு, தோட்டத்திலுள்ள அவர்களின் உறவினரின் கல்லறையையும் சேதப்படுத்தியுள்ளார். மேலும் அரிவாளைக்காட்டி மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து தேவநேசம் தங்கத்தாய், மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர்.


Next Story