மனைவி, கள்ளக்காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மனைவி, கள்ளக்காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

சுமைதூக்கும் தொழிலாளியை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திண்டுக்கல்

வேடசந்தூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 33). சுமைதூக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி விஜயசாந்தி. கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி நவீன்குமார், கோடாங்கிபட்டி அருகே உள்ள கவுண்டர்குளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், விஜயசாந்திக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற சிவாவுக்கும் (33) கள்ளக்காதல் இருந்து வந்தது.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக நவீன்குமாரை கழுத்தை அறுத்து பழனிசாமி கொலை செய்துள்ளார். இதற்கு நவீன்குமாரின் மனைவி விஜயசாந்தியும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விஜயசாந்தி, அவரது கள்ளக்காதலன் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story