வீடு தீயில் எரிந்து நாசம்


வீடு தீயில் எரிந்து நாசம்
x

வீடு தீயில் எரிந்து நாசம் ஆனது.

கரூர்

தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது40).இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஓட்டு வீடு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த உணவு பொருட்கள், துணிமணிகள், ஆவணங்கள் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story