வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசம்


வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசம்
x

வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

குளித்தலை அருகே உள்ள கீழ தண்ணீர் பள்ளியை சேர்ந்தவர் அம்சவள்ளி. இவர் தனக்கு சொந்தமான மாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்போரை வீட்டின் மாட்டு கொட்டகை அருகே அடுக்கி வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாலை திடீரென வைக்கோல்போர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல்போர் தீயில் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story