கோவிலுக்கு சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலி


கோவிலுக்கு சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலி
x

கோவிலுக்கு சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி இறந்தான்.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணங்காரன்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன். கொத்தனார். இவருக்கு 2 மகன்கள் உண்டு. இதில் மூத்த மகனான அஜய்(வயது 8), கவரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் சூரக்குழி ரெட்டப்பள்ளம் அருகில் உள்ள தனது உறவினரின் குலதெய்வ கோவில் விழாவிற்காக வேல்முருகன், தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது மூத்த மகன் அஜய்யை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடினர். அப்போது சூரக்குழி ரெட்டப்பள்ளம் ஏரியில் அஜய் பிணமாக மிதந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார், அங்கு வந்து அஜய்யின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அஜய்யின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story