தீக்குளித்தவர் சாவு


தீக்குளித்தவர் சாவு
x

தீக்குளித்தவர் உயிரிழந்தார்.

அரியலூர்

செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 48). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டிற்கு பின்புறம் அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story