நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் திறப்புரூ.64.45 லட்சம் பக்தர்கள் காணிக்கை


நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் திறப்புரூ.64.45 லட்சம் பக்தர்கள் காணிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் ரூ.64 லட்சத்து 45 ஆயிரம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உண்டியல் திறப்பு

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 6 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் நரசிம்மசாமி கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளள.

இவை 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் நேற்று கோவில் செயல் அலுவலர் இளையராஜா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

ரூ.64.45 லட்சம் காணிக்கை

பின்னர் அதில் உள்ள காணிக்கை பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன. அதன்படி உண்டியல்களில் ரூ.64 லட்சத்து 45 ஆயிரத்து 95, 55 கிராம் தங்கம், 470 கிராம் வெள்ளி இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story