கனடா நாட்டில் சங்கரன்கோவில் வாலிபர் சாவு; உடலை இந்தியா கொண்டு வர கோரிக்கை


கனடா நாட்டில் சங்கரன்கோவில் வாலிபர் சாவு; உடலை இந்தியா கொண்டு வர கோரிக்கை
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 11:49 AM GMT)

கனடா நாட்டில் நடந்த சாலை விபத்தில் சங்கரன்கோவில் வாலிபர் இறந்தார். அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்- கோமதி தம்பதியரின் மகன் சிதம்பரவேல் பிரகாஷ் (வயது 28). இவருக்கு திருமணம் முடிந்து இந்துமதி என்ற மனைவியும், 1½ வயதில் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிதம்பரவேல் பிரகாஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது கார் மோதி இறந்தார். இதனை அறிந்ததும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். மேலும் சிதம்பரவேல் பிரகாஷின் உடலை இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை அறிந்ததும் ராஜா எம்.எல்.ஏ. கூறுகையில், "கனடா நாட்டில் உயிரிழந்த வீரசிகாமணியை சேர்ந்த சிதம்பரவேல் பிரகாஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


Next Story