வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Feb 2023 7:48 PM GMT (Updated: 27 Feb 2023 10:05 AM GMT)

திசையன்விளையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை சொக்கலிங்க விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் ஆறுமுக ஆனந்த் (30). கடந்த 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் ஆறுமுக ஆனந்த் காயம் அடைந்து, மனநலம் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story