வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:45 PM GMT)

திருச்செந்தூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலை கிணறு புது காலனியைச் சேர்ந்த கன்னிமுத்து மகன் சுடலைகுமார் (வயது 22), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் தனி அறையில் படுக்க சென்றார். பின்னர் நேற்று காலையில் வெகு நேரமாகியும் சுடலைகுமார் அறை திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அங்கு சுடலைகுமார் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுடலைகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story