நாற்காலியில் இருந்து தவறி விழுந்த டீக்கடை உரிமையாளர் சாவு


நாற்காலியில் இருந்து தவறி விழுந்த டீக்கடை உரிமையாளர் சாவு
x

நாற்காலியில் இருந்து தவறி விழுந்த டீக்கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம்(வயது 54). இவர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் தனியார் கல்லூரி எதிரே கடந்த 2 மாதங்களாக டீக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று மாலை டீக்கடையில் இருந்த ராஜாங்கம் சீலிங்கில் உள்ள மின்விளக்கை(பல்பு) மாற்ற நாற்காலி போட்டு, அதன் மீது ஏறினார். பின்னர் அவர் மின்விளக்கை மாற்ற முயன்றபோது நாற்காலியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் மயக்கமடைந்த அவரை கடை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story