தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x

தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின்போது பல்வேறு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. மதுவிலக்கு திருத்த சட்டம் உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவு பெற்றது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையை சபாநாயகர் அப்பாவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


Next Story