கூட்டணி குறித்து பேச்சு - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்


கூட்டணி குறித்து பேச்சு - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
x

கூட்டணியை நாங்கள் யாரும் விட்டுக் கொடுத்து போவதில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை,

திருச்சியில் சமீபத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அமைப்பு, வரும் சட்டமன்றத் தேர்தலில் இருக்கும் என்று சொல்ல முடியாது" என தெரிவித்து இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.என்.நேரு,

கூட்டணி பற்றி நான் பேசியதை திருத்தி தவறாக வெளியிட்டுள்ளனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தி.மு.க தலைவர் எங்கள் கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கமாட்டார். கூட்டணியை நாங்கள் யாரும் விட்டுக் கொடுத்து போவதில்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக்கொண்டு உள்ளனர். வேண்டும் என்றே நான் பேசியதை மாற்றி வெளியிட்டுள்ளனர். என தெரிவித்தார்.


Next Story