கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தேன்கனிக்கோட்டையில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை தாலுகா சந்தனப்பள்ளி அருகே உள்ள எஸ்.குருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதற்காக அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story