வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை


வேலகவுண்டம்பட்டி அருகே  விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
x

வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). மினி லாரி டிரைவர். இவருடைய மனைவி அருள்மொழி (45). கிருஷ்ணன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததை மனைவி கண்டித்து வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த கிருஷ்ணன் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கிருஷ்ணன் இறந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story