காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Sep 2023 7:00 PM GMT (Updated: 24 Sep 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது27). கூலித்தொழிலாளி. நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜெயஸ்ரீ காதல் கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து நவீன்குமார் பலமுறை மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை.

தற்கொலை

காதல் திருமணம் செய்த மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த நவீன்குமார் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story