ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 10:47 AM GMT)

ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

சிவகங்கை

சிவகங்கை

ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி விடுதிகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 7 கல்லூரி விடுதிகள் உள்ளன. இதில் 3 மாணவர்கள் விடுதிகள், 4 மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் சேர்ந்து பயனடையலாம்.

விடுதியில் சேரவிரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் வீட்டிற்கும், கல்லூரிக்கும் உள்ள தூரம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிற வகுப்பினர் 5 சதவீதமும் சோ்க்கப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கலாம்

எனவே, தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கிக்கணக்கு புத்தக நகல், சாதிச்சான்று, வருமான சான்று, பள்ளி மாற்றுச்சான்று, நன்னடத்தை சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்பு சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிற 30-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடம் ஒப்படைத்து, https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story