9-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை


9-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
x

பல்லடம் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டான். இதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டான். இதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-

மாணவன் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சபரி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மகன் கவியரசு (வயது 14). பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்ததான். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவன் கவியரசு வழக்கம் போல் வீட்டிற்கு வந்தான். ஏற்கனவே பெற்றோர் வேலைக்கு ெசன்று விட்டதால் மாணவன் மட்டும் தனியாக இருந்தான்.

இதற்கிடையில் வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பினர். அப்போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தனர். இதையடுத்து அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது கவியரசு இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் மாணவனின் பெற்றோர் அலறி துடித்தனர். இவர்களது அலறல் குரல் கேட்டு வந்த அக்கம்- பக்கத்தினர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இது குறித்து மாணவரின் தந்தை முத்துக்குமார் பல்லடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலைக்கு காரணம் என்ன என்று விசாரித்து வருகிறார்கள். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவன் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-------


Related Tags :
Next Story