Normal
மாணவ-மாணவிகள் தர்ணா

திருத்துறைப்பூண்டி அருகே அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கஜா புயலின் போது கடுமையக சேதமடைந்தது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
ஆர்ப்பாட்டம்
கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் நேற்று கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் 1 மணி நேரம் நடந்தது.
Related Tags :
Next Story