சக்கரத்தில் சிக்கி மாணவன் படுகாயம்; பஸ்சை நொறுக்கிய நண்பர்கள்


சக்கரத்தில் சிக்கி மாணவன் படுகாயம்; பஸ்சை நொறுக்கிய நண்பர்கள்
x

காரியாபட்டி அருகே சக்கரத்தில் சிக்கி மாணவன் படுகாயம் அடைந்தான். சக நண்பர்கள் பஸ்சை நொறுக்கினர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே சக்கரத்தில் சிக்கி மாணவன் படுகாயம் அடைந்தான். சக நண்பர்கள் பஸ்சை நொறுக்கினர்.

என்ஜினீயரிங் மாணவர்

மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 21). இவர் காரியாபட்டி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அவருடன் சக மாணவர்களும் பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. அப்போது மாணவர்கள் அனைவரும் பஸ்சில் ஏறினர். அப்போது எதிர்பாராதவிதமாக ஹரிபிரசாத் படிக்கட்டில் இருந்து தவறி கீேழ விழுந்தார்.

படுகாயம்

அப்போது பஸ்சின் பின் சக்கரம் மாணவனின் கால் மீது ஏறியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த அங்கிருந்த அவரது நண்பர்கள் மற்றும் சக மாணவர்கள் ஆத்திரமடைந்து அரசு பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த ஹரிபிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆவியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story