விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்


விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்
x

அரூர் தாலுகா அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

அரூர்:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரூர் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து போராட்டத்தை தொடங்கி வைத்தார். கே. ஈச்சம்பாடி, கோமாளிப்பட்டி, பச்சினாம்பட்டி, ஜடையம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சித்தேரி மலைவாழ் மக்களுக்கு நில பட்டா வழங்க வேண்டும். கீழனூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அங்குள்ள குள்ளன் குட்டையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story