அயோத்தியாப்பட்டணத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சி உண்ணாவிரத போராட்டம்


அயோத்தியாப்பட்டணத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சி உண்ணாவிரத போராட்டம்
x

அயோத்தியாப்பட்டணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டி பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டிய இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அந்த நிலத்தை மீட்கக்கோரியும் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சேலம் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மணியன் தலைமை தாங்கினார். இதில் சேலம், நாமக்கல் மண்டல செயலாளர் இமயவர்மன், சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் தெய்வானை, முன்னாள் மண்டல செயலாளர் நாவரசன், மண்டல துணைச்செயலாளர் ஆறுமுகம், வடக்கு மாநகர மாவட்ட செயலாளர் காஜாமைதீன், மாநிலத் துணைச் செயலாளர் பாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story