சேலத்தில் 2-வது நாளாகஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


சேலத்தில் 2-வது நாளாகஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x

சேலத்தில் 2-வது நாளாக ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

சேலம்

94 மாத பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற நாளன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு சார்பில் சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. சங்கத்தின் மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். மேலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story