நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்



நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, நெல்லையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06008) மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
அதேபோல, திருச்சியில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06032) மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire