சென்னை எழும்பூர்-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்


சென்னை எழும்பூர்-விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்
x

கோப்புப்படம்

கோடை காலத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விசாகப்பட்டினத்தில் இருந்து வருகிற 27 மற்றும் ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-08577) மறுநாள் காலை 8.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 28 மற்றும் ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (08578) மறுநாள் மதியம் 1 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story