கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழா:விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை1,300 சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழா:விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை1,300 சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மாவட்டத்தில் 1,300 சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மாவட்டத்தில் 1,300 சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் ஓசூர் பகுதியில் 400 சிலைகளும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 900 சிலைகளும் என மொத்தம் 1,300 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஞானவிநாயகர் கோவில்

இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அந்த அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து சாமிக்கு தங்கக்கவசம் செய்யப்பட்டது. பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் தங்கக்கவச அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வரசித்தி விநாயகர் கோவில்

இதேபோன்று காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சாமிக்கு அபிேஷகம், ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரியில் சேலம் சாலையில் உள்ள ஆதிசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. லண்டன்பேட்டை டி.பி.லிங்க் சாலை வரசித்தி விநாயகர் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

900 போலீசார் பாதுகாப்பு

காவேரிப்பட்டணம் பேரூஅள்ளி காவாக்கரை தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பர்கூர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து சாமிக்கு, அருகம்புல், எருக்கம் பூ மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதனால் பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்து சாமி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சிலை அமைப்பாளர்களும், சிலைகளின் அருகில் இருந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

வீடுகளில்...

விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபட்டனர். விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொங்கல் படைத்து வழிபட்டனர்.


Next Story