உறியடி வெங்கடரமண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை


உறியடி வெங்கடரமண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
x

உறியடி வெங்கடரமண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கரூர்

சின்னதாராபுரம் அருகே புஞ்சை காளிக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற உறியடி வெங்கடரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் பங்குனி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி மூலவர் சாமிக்கு தீர்த்தங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், கோவிலில் புதிதாக அமைய உள்ள கொடி மரத்திற்கு பக்தர்கள் இலுப்பை எண்ணெய் ஊற்றி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Related Tags :
Next Story