2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

திருப்பத்தூரில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் ஒரப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, 50 கிலோ அளவிலான, 40 மூட்டைகளில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. வேனை ஓட்டி வந்த திருப்பத்தூர் மாவட்டம், சின்னபசலிக்குட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (வயது 30) என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருப்பத்தூர் பகுதியில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க கடத்த முயன்றது தெரிந்தது. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஜெயபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன் (27) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story