பள்ளி மாணவி மாயம்


பள்ளி மாணவி மாயம்
x

பள்ளி மாணவி மாயம் ஆனார்.

கரூர்

வேலாயுதம்பாளையம் அருகே அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் ரஞ்சிதா (வயது 17). இவர் 9-ம் வகுப்பு படித்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று ரஞ்சாதாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் ரஞ்சிதா வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது மகளை வீட்டில் காணவில்லை. இதையடுத்து பெற்றோர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து, மாயமான ரஞ்சிதாவை தேடி வருகிறார்.


Next Story