விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு


விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு
x

விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

விவசாயி வீட்டில் ரூ.1½ லட்சம் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

வாணாபுரம் பொதுப்பணித்துறை அலுவலக தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 38). விவசாயி. சம்பவத்தன்று இவர் காலையில் வீட்டை பூட்டிவிட்டு நிலத்திற்கு சென்றார். அங்கு வேலை முடிந்து மாலை திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. அதில் இருந்த நகை, பணம் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயசூரியன், சக்திவேல் விசாரணை செய்தனர். மொத்தம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பநகை, பணம் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story