மாணவ, மாணவிகள் சாலைமறியல்


மாணவ, மாணவிகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அடுத்துள்ளது தவத்தாரேந்தல் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருப்புவனத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசு பஸ்சில்தான் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இது தவிர கூலி வேலைக்கு செல்பவர்களும் அரசு பஸ்சில் சென்று வருகின்றனர்.

ஆனால் தவத்தாரேந்தல் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் சரியான நேரத்திற்கு வராமல் தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பஸ் வராததால் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து கருவக்குடிக்கு வந்து அங்கிருந்து ஆட்டோவில் பயணிக்கும் நிலை உள்ளது.

இதனால் நேற்று காலை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பஸ்களை பள்ளி நேரத்திற்கு இயக்கக்கோரி திருப்புவனம்-நரிக்குடி சாலையில் உள்ள மேலராங்கியன் விலக்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story