பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்  சாலை மறியல்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்

தஞ்சாவூர்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைமை அலுவலகத்திலும், தலைவர்களின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகள் நடத்துவதாக கூறியும், அதனை கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அய்யம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகே நகரத்தலைவர் யாசர் அராபத் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 14 பேரை பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் கும்பகோணம் அருகே ஆடுதுறை பஸ் நிலையம் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ஹாலித் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் ஈடுபட்ட 23 பேரை திருவிடைமருதூர் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கைது செய்தனர். அதிராம்பட்டினத்தில் 17 பேரும், பண்டாரவாடையில் 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story