நர்சு பலி; வாலிபர் படுகாயம்


நர்சு பலி; வாலிபர் படுகாயம்
x

தஞ்சை அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நர்சு பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நர்சு பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

இளம்பெண்

கரூர் மாவட்டம் பெரியசாமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 23). திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகில் உள்ள வேம்பலூரை சேர்ந்தவர் அப்பாகாளை. இவருடைய மகள் கீர்த்திகா(21).(நர்சு) நேற்று மதியம் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் கீர்த்திகாவை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நர்சு பலி; வாலிபர் காயம்

தஞ்சை அருகே உள்ள புதுக்குடி பஸ் நிறுத்தம் எதிரில் மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த கீர்த்திகா சாலையில் தூக்கி வீசப்பட்டார். அப்போது அவருடைய தலையில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கீர்த்திகாவின் உடலை மீட்டு பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் காயம் அடைந்த மணிகண்டன் துவாக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story