அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் ேபாக்குவரத்துக்கழக பணிமனை முன்பு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற சங்கதலைவர் ஞானசேகரன், செயலாளர் முத்துக்கண்ணு மற்றும் பொருளாளர் தியாகராஜன், கவுரவ தலைவர்கள் குழந்தைவேலு வேதரத்தினம், தகவல் தொழில்நுட்ப தொடர்பாளர் வேலாயுதம்செயற்குழு உறுப்பினர்கள் ராஜராஜன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 75 மாதமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வுகால பண பலன்கள்

ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுகால பண பலன்களை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்துக்கழக ஓய்வூதிய திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பி வைத்தனர்.


Next Story