ஆலங்குளத்தில் மகளிர் போலீஸ்நிலையம் அமைக்க கோரிக்கை


ஆலங்குளத்தில் மகளிர் போலீஸ்நிலையம் அமைக்க கோரிக்கை
x

ஆலங்குளத்தில் மகளிர் போலீஸ்நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய நகரங்களுக்கு மத்தியில் ஆலங்குளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கண்டியாபுரம், முத்துச் சாமிபுரம், குண்டாயிருப்பு, ரெட்டியபட்டி, எட்டாக்காபட்டி, எதிர்கோட்டை, உப்புபட்டி, காக்கிவாடன்பட்டி, மாதாங்கோவில்பட்டி, கிளியம்பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, புளியடிபட்டி, கோபாலபுரம், ஏ.லட்சுமிபுரம், கீழாண்மறைநாடு, வலையபட்டி, குறுஞ்செவல், பெத்லேகம், அருணாசலபுரம், சிவலிங்காபுரம், நரிக்குளம், கண்மாய்பட்டி, சுண்டங்குளம், சங்கரமூர்த்தி பட்டி, ராசாப்பட்டி, கரிசல்குளம், தொம்ப குளம், கீழராஜகுலராமன், காளவாசல், கொங்கன்குளம், மேல பழையாபுரம், எல்.மேட்டூர், டி.மேட்டுர், கங்கர் செவல், பாரைப் பட்டி, ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் மகளிர் சம்பந்தப்பட்ட புகார்கள் எதுவும் இருந்தால் அதுதொடர்பாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மகளிர் போலீஸ்நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஆலங்குளத்தை மையமாக வைத்து ஆலங்குளத்தில் மகளிர் போலீஸ்நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story