41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரிக்கை


41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரிக்கை
x

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருச்சி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம், திருச்சி செங்குளம் காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீவானந்தம் வரவேற்று பேசினார். சங்க பொதுச் செயலாளர் அம்சராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், சங்கத்தின் 8-வது மாநில மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் உடுமலைப்பேட்டையில் நடத்துவது, மாநாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஆபத்துப்படி சம்பளத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story