மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை


மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம்

தொண்டி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குருசாமி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாடானை ஊராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பில் நேரடியாக மின்மோட்டர் பொருத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர். மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய தண்ணீரை தங்களது மற்ற தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மற்ற பகுதிகளுக்கும் பொது குழாய்களுக்கும் தண்ணீர் செல்வதில்லை. குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, திருவாடானை ஊராட்சியில் மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story