டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்


டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:46 PM GMT)

டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு சின்னத்தொண்டி வடவயல் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் நீண்ட காலமாக குறைந்த அழுத்த மின்சார வசதியே இருந்து வருகிறது. இதனால் இக்கிராமத்தில் மின் விளக்குகள் குறைந்த வெளிச்சத்திலும் டி.வி. குளிர்சாதன பெட்டிகள் போன்ற மின்சார கருவிகள் பயன்படுத்த முடியாத நிலையிலும் இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிராமத்திற்கு உயர் மின் அழுத்த வசதி செய்து தர வேண்டும் என்றும் பலமுறை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இப்பகுதிக்கு புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு அதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பணியை துரிதப்படுத்தி உடனடியாக கிராமத்திற்கு உயர் மின் அழுத்த வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story