விபத்தில் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் மறியல்


விபத்தில் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் மறியல்
x

விபத்தில் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

தொட்டியம்:

வாகனம் மோதியது

திருச்சி மாவட்டம், தொட்டியம் பழைய சேலம் சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 50). இவர் கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி-சேலம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவர் மீது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியனின் மகன் சுந்தர் அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறியல்

இந்நிலையில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தை கண்டுபிடிக்க கோரி, திருச்சி-சேலம் சாலையில், பாலசுப்பிரமணியினின் உடலுடன் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை விரைவில் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் திருச்சி-சேலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story