கூடுதல் பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்


கூடுதல் பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்
x

கூடுதல் பஸ் வசதி கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புது அம்மாபாளையம் கிராம மக்கள் கூடுதல் பஸ் வசதி கேட்டு நேற்று காலை பஸ் நிறுத்தம் அருகே திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் துறையூரில் இருந்து நக்கசேலம், புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, மங்கூன் வழியாக லாடபுரம் வரை அரசு டவுன் பஸ் ஒன்று காலை நேரத்தில் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாலை நேரத்திலும் இயக்க வேண்டும், என்று தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தினர்.


Next Story