புரோட்டா மாஸ்டர் கழுத்தை இறுக்கி கொலை


புரோட்டா மாஸ்டர் கழுத்தை இறுக்கி கொலை
x
தினத்தந்தி 20 May 2023 7:00 PM GMT (Updated: 20 May 2023 7:00 PM GMT)

குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார்.

புரோட்டா மாஸ்டர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). இவர் ஒட்டன்சத்திரத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி சுப்புலட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் ஆனந்த் (42).

பெரியம்மாவுக்கு உரிய சிகிச்சை

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடராஜன் குலசேகரன்பட்டினம் சவேரியார் கோவில் தெருவில் உள்ள தனது தங்கை ஆவுடையம்மாள் வீட்டிற்கு வந்தார்.

நேற்று முன்தினம் நடராஜன் குலசேகரன்பட்டினம் பெட்ரோல் பல்க் பகுதியில் இருந்த தனது மகன் ஆனந்ைத பார்க்க சென்றார். அப்போது, அங்கு பெரியப்பா உறவு முறையான முத்தையா மகன் சின்னத்துரை (23) என்பவர் வந்தார். அவர் எனது பெரியம்மா சுப்புலட்சுமிக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் இறந்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

கொலை

அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை கீழே கிடந்த காங்கிரீட் கல்லால் நடராஜனை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த துண்டால் கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க வந்த ஆனந்தையும் காங்கிரீட் கல்லால் தாக்கினார். எனினும் பலத்த காயம் அடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சின்னத்துரை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

வலைவீச்சு

இதுகுறித்து உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை வலைவீசி தேடிவருகிறார்கள். குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story