தேன்கனிக்கோட்டையில் பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சி


தேன்கனிக்கோட்டையில் பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 Jun 2023 7:30 PM GMT (Updated: 10 Jun 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையில் உள்ள கோல்கொண்டா பிராமண சமிதியில் பிராமண சங்கம் சார்பில் 7 குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் என்ற பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. வேத விற்பனர்கள் ஸ்ரீசானுதாசன், நரசிம்மன், லட்சுமிபதி, லட்சுமிகாந்தன் ஆகியோர் 7 குழந்தைகளுக்கு அவர்களின் தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் ஆசியுடன் பூணூல் அணிவித்தனர். பின்னர் அவர்கள் பேட்டராய சாமி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு சாமிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.


Next Story